உடுமலை கல்குவாரிகளில் விதி மீறல்கள் குறித்து ஆய்வு செய்ய முடிவு!

திருப்பூர் மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குனர் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், உடுமலை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள குவாரிகளில் விதிமீறல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: உடுமலை அருகேயுள்ள கல்குவாரிகளில் விதி மீறல்கள் நடைபெற்றுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர், திண்டுக்கல், உடுமலை, மடத்துக்குளம், பழனி தாலுகாவிலுள்ள குவாரிகளிலிருந்து, கேரளாவுக்கு, தினமும், 200 லோடு, ஜல்லி, எம்-சாண்ட் உள்ளிட்ட கனிமங்கள் சட்ட விரோதமாக கடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

இதனால், குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட பலமடங்கு ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டு, கனிமங்கள் கொள்ளை அடிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே நேற்று முன்தினம், கேரளாவுக்கு கனிமங்கள் கொண்டு சென்ற, 9 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து, அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், குவாரிகளில் விதிமீறல்கள் குறித்து, திருப்பூர் மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குனர் (பொறுப்பு) சச்சின் ஆனந்த் தலைமையில் உடுமலை தாலுகா அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில், அனுமதிக்கப் பட்ட அளவை விட, கூடுதலாக, கனிம வளங்கள் ஏற்றியதாக, 9 லாரிகளுக்கும், ரூ.5.22 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதனையடுத்து, கனிம வளத்துறை உதவி இயக்குனர் சச்சின் ஆனந்த் கூறியதாவது,

சட்டவிரோத கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவது குறித்து, திண்டுக்கல் மாவட்ட கனிம வளத்துறைக்கு தகவல் கொடுத்து, குவாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதலாக உள்ள கனிம வளங்கள் பறிமுதல் செய்து, உரிய ஆய்வு அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...