கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை - பரபரப்பு!

கோவை சரக டிஐஜி விஜயகுமார் தனது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



கோவை: கோவை சரக டிஐஜி விஜயகுமார் தனது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்த முத்துசாமி பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் விஜயகுமார் கோவை சரக டிஐஜியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

தேனி மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமார் குரூப் ஒன் தேர்வில் தேர்ச்சி பெற்று டிஎஸ்பியாக தனது பணியை துவங்கினார். அதை தொடர்ந்து பொறியியல் பட்டதாரியான அவர் தமிழ் வழியில் ஐபிஎஸ் தேர்வு எழுதி கடந்த 2009இல் தேர்ச்சி பெற்று காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக இணைந்தார்.

முதன்முதலாக நெல்லை மாவட்ட வள்ளியூரில் ஏஎஸ்பி ஆக தனது பணியை தொடங்கிய அவர், காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில், மாவட்ட எஸ்.பியாக பணியாற்றியவர்.

தொடர்ந்து, சிபிசிஐடியில் எஸ்.பி ஆகவும் பணியாற்றிய விஜயகுமார், சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் முதன்முறையாக விசாரணை நடத்திய அதிகாரியாவார்.

கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களை கவனித்து வந்த விஜயகுமார், கோவை சரக பொறுப்பேற்றது முதல் பல்வேறு பணிகளை செய்து வந்தார். புகார் அளிக்க வரும் பொதுமக்கள் மற்றும் காவலர்களிடமும் கனிவாக நடந்து கொள்பவர் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக டிஐஜி விஜயகுமார், மன உளைச்சலில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இன்று அதிகாலை தனது முகாம் அலுவலகத்தில் இருந்த அவர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நேற்று இரவு கோவை மாநகர துணை ஆணையர் ஒருவரின் மகன் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திற்காக சென்று விட்டு மீண்டும் திரும்பி வந்தபோது அவரது கன் மேனிடம் (gun man) தனது துப்பாக்கியை வாங்கி வைத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.



துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட கோவை சரக டிஐ ஜி விஜயகுமார் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.



சம்பவம் தொடர்பாக பந்தய சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. உயர் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...