கோவை அருகே போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் போல நடித்து மளிகை கடையில் ரூ.1.70 லட்சம் பறிப்பு!

கோவை மாவட்டம் குனியமுத்தூர் அருகே போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் எனக்கூறி மளிகைக்கடையில் சோதனை நடத்துவது போல் நடித்து ரூ.1.70 லட்சம் பறித்துக்கொண்டு தப்பிச்சென்ற 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் குனியமுத்தூர் அருகே போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் போல நடித்து ரூ.1.70 லட்சம் பறித்துச்சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை குனியமுத்தூர் அடுத்த இடையர்பாளையம் சர்ச் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(52). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று இவரது கடைக்கு காரில் வந்த 3 பேர் பாலகிருஷ்ணனிடம் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் என அறிமுகம் செய்து கொண்டுள்ளனர்.

பின்னர் கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக தகவல் வந்துள்ளது. எனவே, சோதனை செய்ய வேண்டும் என தெரிவித்து கடைக்குள் சென்று சோதனை செய்தனர். அப்போது கடையில் இருந்து சில ஹான்ஸ் பாக்கெட்டுகளை எடுத்தனர்.

மேலும் கல்லாவில் இருந்த ரூ. 2 லட்சத்தையும் எடுத்து கொண்டு, பாலகிருஷ்ணனிடம் உங்களுக்கு புகையிலை பொருட்கள் சப்ளை செய்வது யார்? என காட்டுங்கள் என கூறி பாலகிருஷ்ணனையும், அவரது மகனையும் தாங்கள் வந்த காரில் ஏற்றி அழைத்து சென்றனர்.

சுந்தராபுரம் காமராஜர் தெரு அருகே சென்ற போது காரை நிறுத்திய 3 பேர் கும்பல்ம் தாங்கள் கடையில் எடுத்த ரூ. 2 லட்சத்தில், ரூ. 30 ஆயிரம் மட்டும் பாலகிருஷ்ணனிடம் கொடுத்து விட்டு, யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி அவர்களை இறக்கி விட்டு சென்றனர்.

அப்போது தான் அவர்கள் மோசடி பேர்வழி என பாலகிருஷ்ணனுக்கு தெரியவந்தது. இதுகுறித்து அவர் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கும்பல் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...