தேசிய மருத்துவர்கள் தினம் - கோவை அரசு மருத்துவமனையில் உற்சாக கொண்டாட்டம்!

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மேலும் பயிற்சி மருத்துவர்கள் ஒன்றிணைந்து மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து தேசிய மருத்துவர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


கோவை: தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி கோவை அரசு மருத்துவமனையில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

ஆண்டுதோறும் ஜூலை 1 தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. மருத்துவத்துறையில் பி சி ராயின் அர்ப்பணிப்பை போற்றும் வகையில் அவரது பிறந்தநாளை தேசிய மருத்துவர்கள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

அதன்படி கோவை அரசு மருத்துவமனையில் நேற்றைய தினம் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டது.



மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் இருப்பது போன்று போடப்பட்டிருந்த கோலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.



இதையடுத்து பயிற்சி மருவத்துவர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகள் தெரிவித்தனர்.



இதை தொடர்ந்து மருத்துவமனையின் முதல்வர் நிர்மலா தலைமையில் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும் மருத்துவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...