பீளமேடு மேம்பாலப் பணிகளை விரைந்து முடித்திட அனைத்துக் கட்சி சார்பில் ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், பீளமேடு பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 4 வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்டு தற்போது வரை முடிக்கப்படாமல் உள்ளது. மேம்பாலப் பணிகள் மெத்தனமாக நடைபெறுவதால் பீளமேடு அனைத்து அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், பொது மக்கள் ஆகியோர் ஒன்றிணைந்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது.

மேலும், கருப்புக் கொடி கட்டுவது, உண்ணாவிரதம், அறப்போராட்டங்கள் உள்ளிட்டவை மேற்கொண்டும் தற்போது வரை அப்பணிகள் கிடப்பில் போடப்பட்டதைப் போன்றே உள்ளது.

மேலும், பீளமேடு ரயில் பாதைக்கு முன்புறத்தில் எஸ்ஏஐஎல் என்னும் நிறுவனம் மேம்பாலம் அருகில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் இருந்து இரும்பு தளவாடங்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகளங்கள் தற்போதுள்ள சர்வீஸ் சாலையில் வந்து செல்வதால் சாலை எழிதில் பழுதடைவதுடன் பொதுமக்களுக்கும் பெருமளவில் இடையூறாக உள்ளது.

எனவே, இந்த எஸ்ஏஐஎல் ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா என்னும் நிறுவனத்தை வேறு இடத்திற்கு மாற்றவேண்டும். மேலும், உடனடியாக பீளமேடு மேம்பாலப் பணிகளை முடிக்க வேண்டும்' என இன்று அதிமுக, திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட், தேமுதிக, பீளமேடு கன்சியூமர் வாய்ஸ் உள்ளிட்ட அனைத்து கட்சி சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

Newsletter

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...

நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்...

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...