பீளமேடு ரயில்வே மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல்!

பீளமேடு ரயில்வே மேம்பாலத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அங்கு போக்குவரத்து போலீஸாரை நியமித்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என 26 ஆவது வார்டு கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி மாநகரப் போக்குவரத்து காவல் துணை ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.



கோவை: பீளமேடு ரயில்வே மேம்பாலத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசாரை நியமிக்க வேண்டுமென கவுன்சிலர் சித்ரா மனு அளித்துள்ளார்.

கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் (போக்குவரத்து) மதிவாணனிடம், மாநகராட்சி 26வது வார்டு கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது,

பீளமேடு ரயில்வே மேம்பாலத்தை சுற்றி எல்லைத் தோட்டம், முருகன் நகர், ஹட்கோ காலனி, காந்திமாநகர், வி.கே.ரோடு, கருப்பண்ண கவுண்டர் லே அவுட் உள்ளிட்ட பல்வேறு தெருக்கள் உள்ளன. 

இந்த ரயில்வே மேம்பாலம் வழியாக இப்பகுதி மக்கள் மற்றும் அலுவலகங்கள். கல்லூரிகள், பள்ளிகள் என அன்றாட பணிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர்.

இந்த பாலத்தில் லாரிகள், கனரக வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி காலை 7 மணி முதல் 10 மணி வரை போக்குவரத்து அதிகம் உள்ள நேரங்களில் செல்கின்றன. 

இதனால் ரயில்வே மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இப்பகுதியில் போக்குவரத்து போலீசாரை நியமித்து போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...