தனியார் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களை கொண்டு தமிழ் கற்றுத்தர வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தல்!

கோவை, ஈரோடு, நாமக்கல், நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 350 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகள் வழங்கும் நிகழ்வில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், தனியார் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களை கொண்டு தமிழ் கற்றுத்தர வேண்டும் என அறிவுறுத்தினார்.



கோவை: கோவை, ஈரோடு, நாமக்கல், நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 350 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார். 

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் கீழ் 12,631 மெட்ரிகுலேசன் பள்ளிகள். மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிகள் சுயநிதி உயர்நிலை பள்ளிகள், சுயநிதி மேல்நிலைப் பள்ளிகள் மழலையர் மற்றும் தொடக்க பள்ளிகள், இளம் மழலையர் பள்ளிகள் மற்றும் மாநிலப் பாடத்திட்டம் அல்லாத பிற வாரியப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 

இவ்வகையான் தனியார் பள்ளிகள் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை பள்ளியின் அங்கீகாரத்தினைப் புதுப்பித்து ஆணை பெற்று செயல்பட்டு வருகின்றன. 

மாநில பாடத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகள் பயன்பெறும் வகையில் மண்டல வாரியாக அங்கீகாரச் சான்றுகளைப் புதுப்பித்து ஆணை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

முதற்கட்டமாக திருச்சி, அரியலூர், திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் உள்ளடக்கிய பத்து மாவட்டங்களைச் சார்ந்த தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரச் சான்றுகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி திருச்சியில் வழங்கினார்.



இதனைத் தொடர்ந்து கோவை, ஈரோடு நாமக்கல், நீலகிரி மற்றும் திருப்பூர் உள்ளடக்கிய ஐந்து மாவட்டங்களைச் சார்ந்த 350 தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கோவை, வெங்கடேசபுரம், புவனேஷ்வரி நகரில் உள்ள அவிலா கான்வென்ட் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் அங்கீகார ஆணைகள் வழங்கப்பட்டது.



இவ்விழாவில், தனியார் பள்ளிகள் இயக்குநர் முனைவர்.எஸ்.நாகராஜ முருகன் வரவேற்புரையுடன், கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு அங்கீகார ஆணைகளை வழங்கினார். 



இந்த நிகழ்வில், அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது, 5 மாவட்டங்கள் 350 தனியார் பள்ளி நிர்வாகிகள் தாளாளர்கள் வந்து உள்ளனர். மாணவிகள் அழகான பேண்ட் வாத்தியங்கள் வாசித்துக் காட்டினர், இதை எங்கும் நான் பார்த்ததில்லை. நல்ல வரவேற்பு வழங்கினார்கள். 

எந்த பள்ளியிலும் இதுபோன்று நான் கண்டதில்லை. தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணை ஜூன் 30-ம் தேதி திருச்சி மாவட்டத்தில் 10 மாவட்டங்கள் உள்ளடக்கிய பள்ளிகளுக்கு இந்த ஆணையை வழங்கினோம்.



22 - 23 அங்கீகார ஆணை முடிவுற்ற நிலையில் உள்ள பள்ளிகள் உடனடியாக விண்ணப்பம் செய்யுங்கள். கல்விப் பணி அனைத்திற்கும் மேலானது. மாணவ செல்வங்களை நல்ல மனிதனாக ஆக்குவது பள்ளிக்கூடங்கள். அப்படிப்பட்ட இந்த பள்ளிகளுக்கு ஆணை வழங்குவது எனக்கு பெருமையாக உள்ளது. 

அரசு பள்ளி மேம்படுத்துவது என்றாலும், தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களும் எங்கள் மாணவர்கள் தான், அதனால் தான், தனியார் பள்ளிகளையும் கவனம் செலுத்துகின்றோம். ஒரு சில பள்ளிகளில் மாணவர்கள் திரைப்படத்தின் மூலமாக கருத்தை பெற்று வருகிறார்கள். 



தனியார் பள்ளியில் தமிழ் மொழிகள் கற்றுத் தர வேண்டும். தமிழ் மொழியை தனியார் பள்ளிகளில் கொண்டு செல்ல நீங்கள் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். பீஸ் கட்ட முடியவில்லை என்றால் ஒரு சில பள்ளிகள் தவறாக பயன்படுத்தும் பொழுது அனைத்து பள்ளிகளும் பதில் சொல்கிறது அதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். ஒவ்வொரு திட்டத்தையும், இல்லாமல், அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றோம்.

இவ்வாறு அவர் பேசினார்.



தொடர்ந்து, அங்கீகார ஆணைகளை பள்ளித் தாளாளர்கள் மற்றும் பள்ளி முதல்வர்களிடம் அமைச்சர் வழங்கினார். 



இந்நிகழ்ச்சியில் மேயர் கல்பனா, மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், எம்பி சண்முக சுந்தரம், துணை மேயர் வெற்றிசெல்வன், திமுக மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், தனியார் மெட்ரிக் பள்ளிகளின் சங்க தலைவர் ஆரோகிய ததயூஸ், தனியார் பள்ளிகள் இயக்கக இணை இயக்குநர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தனியார் பள்ளிகள்) மற்றும் தனியார் பள்ளிகளின் சங்க பிரதிநிதிகள் பெருமளவில் கலந்து கொண்டனர். 

இறுதியாக கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுமதி அவர்கள் நன்றியுரையாற்றினார்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...