ராகல்பாவி அரசு துவக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்!

உடுமலை அடுத்த ராகல்பாவி அரசு துவக்கப்பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில், குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில், பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து தகவல் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.



திருப்பூர்: உடுமலை அடுத்த ராகல்பாவி அரசு துவக்கப்பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில், பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. 

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் நடைபெற்றது. பள்ளி மேலாண்மை குழு கூட்டத்திற்கு ராகல்பாவி ஊராட்சி மன்ற தலைவர் சுமதி செழியன் தலைமை வகித்தார். 



இந்த நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்வில், பள்ளி ஆசிரியர் கண்ணபிரான் பேசியதாவது, 2023- 24 ஆம் கல்வியாண்டில் அரசின் நலத்திட்டங்களான புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், புத்தகப் பை ஆகியவை பெறப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட எண்ணும் எழுத்தும் திட்டம் இந்த ஆண்டு முதல் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளுக்கும் விரிவு படுத்தப்பட்டுள்ளது. 

பள்ளி வயது குழந்தைகள் அனைவரும் பள்ளியில் சேர்க்கப்பட்டு விட்டனர். பள்ளி செல்லா குழந்தைகள் யாரேனும் நமது கிராமத்தில் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார். 

நிறைவாக இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் ஸ்ரீநிதி நன்றி கூறினார்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...