கோவையில் போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரஷ்யாவை சேர்ந்தவர் தப்பியோட்டியதால் பரபரப்பு!

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரஷ்யாவை சேர்ந்தவர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து சென்ற நிலையில் நீதிமன்ற வளாகத்தில் பசி எடுப்பதாக கூறி காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தப்பியோடிய நிலையில், அவரை பிடித்து உணவு வாங்கி கொடுத்து சமாதானப்படுத்தினர்.



கோவை: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரஷ்யாவை சேர்ந்தவர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சென்ற போது காவலர்களிடம் இருந்து தப்பியோடியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

ரஷ்யா நாட்டை சேர்ந்த நபர் போதை பொருள் வழக்கில் திருச்சி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, கோவையில் உள்ள இன்றியமையாத பண்டகங்கள் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக ஆஜர்படுத்த அழைத்து வந்தனர். 

நீதிமன்ற வளாகத்தில் பிற்பகல் 2 மணியளவில், பசிப்பதாக கூறி காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் நீதிமன்றத்தில் இருந்து திடீரென காவலர்களிடம் இருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது. 



அவரை பின் தொடர்ந்த காவலர்கள் அவரை சமாதானம் செய்து நீதிமன்ற வளாகத்தில் உள்ள உணவகத்தில் உணவு வாங்கிக் கொடுத்து சமாதானம் படுத்தினர். 

இந்த சம்பவம் நீதிமன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...