திருப்பூரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள் - பரபரப்பு!

திருப்பூர் குமரன் சாலையில் சாலையை ஆக்கிரமித்து வணிக நிறுவனங்கள் அமைத்திருந்த விளம்பரப் பலகைகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால், அதனை அகற்ற அவகாசம் கொடுத்தும் அகற்றாததால், நெடுஞ்சாலை துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இன்று ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

திருப்பூர்: திருப்பூர் குமரன் சாலையில் இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். 

திருப்பூர் குமரன் சாலையில் ஏராளமான வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில் வணிக நிறுவனங்கள் சாலையை ஆக்கிரமித்து விளம்பரப் பலகைகளை வைத்திருப்பதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.



இதனையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் ஏற்கனவே அவற்றை அப்புறப்படுத்த வணிக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பினர். 

காலக்கெடுவுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றாததன் காரணமாக இன்று மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இணைந்து காவல்துறை பாதுகாப்புடன் சாலையோர ஆக்கிரமிப்புகளை அப்புறபடுத்தி பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.



அப்புறப்படுத்தும் பணியின் போது, மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்ட போது வணிகர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...