பல்லடம் பத்திரப்பதிவு அதிகாரிகளை கண்டித்து வேலை நிறுத்தம் அறிவித்த பத்திரப்பதிவு எழுத்தாளர்கள் சங்கம்!

திருப்பூரிலிருந்து சமீபத்தில் பல்லடத்திற்கு மாறுதலாகி வந்த பத்திர பதிவாளர்களான பிரவீனா, ஈஸ்வரி ஆகியோர் வந்த பின் லஞ்சம் தலைவிரித்தாடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதனை கண்டித்து வரும் ஜூன் 12 ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக பத்திரப்பதிவு எழுத்தாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.



திருப்பூர்: பல்லடம் பத்திரப்பதிவு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதை கண்டித்து, வரும் 12ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக பத்திரப்பதிவு எழுத்தாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பத்திரப்பதிவு அலுவலகத்தின் கீழ் 39 கிராமங்கள் அடங்கியுள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் பத்திரப்பதிவு மூலம் அதிகப்படியான வருவாய் தரும் பகுதிகளில் பல்லடமும் ஒன்று. 

பத்திர பதிவாளர்களான பிரவீனா, ஈஸ்வரி ஆகியோர் சமீபத்தில் திருப்பூரில் இருந்து பணி மாறுதலாகி பல்லடம் வந்துள்ளனர். இவர்கள் வந்த பின் லஞ்சம் தலைவிரித்து ஆடுவதாக பத்திர எழுத்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 



இது தொடர்பாக புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் வரும் ஜூன் 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை ஒரு வாரம் பத்திரப்பதிவு பணிகள் மேற்கொள்வதில்லை என பல்லடம் பகுதி பத்திர ஆவண எழுத்தர்கள் தீர்மானித்துள்ளனர்.

இதுகுறித்து பத்திர எழுத்தாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது, 







பல்லடம் பகுதியில் நூற்றுக்கும் அதிகமான பத்திர ஆவண எழுத்தர்கள் உள்ளனர். சமீப காலமாக தேவையற்ற காரணங்களை கூறி பத்திரங்களை நிராகரிப்பதும், பதிவு செய்யாமல் திருப்பி அனுப்புவதுமான செயல்களில் பத்திரப்பதிவு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

பத்திரங்களின் மதிப்புக்கு ஏற்ப லஞ்சம் நிர்ணயிக்கப்பட்டு கட்டாயமாக்கப்படுகிறது. முதல்வர் தனிப்பிரிவு, பத்திரப்பதிவு ஐஜி, பதிவுத்துறை அமைச்சர், மாவட்ட பதிவாளர், லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் அளித்தும் லஞ்சம் வாங்குவது குறைந்த பாடில்லை. 

எனவே பத்திரப்பதிவு அதிகாரிகளின் செயல்பாடுகளை கண்டித்து நாளை மறுநாள் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை ஒரு வாரத்திற்கு பத்திரப்பதிவு பணிகள் மேற்கொள்ளப்படாது என தீர்மானித்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அடுத்த கட்ட போராட்டத்தை அறிவிப்போம். எங்களது போராட்டத்தால் நாள் ஒன்றுக்கு ரூ.15 லட்சம் வரை அரசுக்கு வருமான இழப்பு ஏற்படும். 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...