ஊழல் அதிகாரிகளுக்கு பாராட்டு விழாவா? - திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட விவசாயிகள் கைது!

திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பாக கனிம வளத்துறையில் பணியாற்றி வரும் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரிகளுக்கு பாராட்டு விழா நடத்துவதாக ஒன்று திரண்ட விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.



திருப்பூர்: திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பாக பாராட்டு விழா நடத்துவதாக ஒன்று திரண்ட விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்ட கனிம வளத்துறை இணை இயக்குனராக பணியாற்றி வருபவர் வள்ளல். இவர் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்படுகின்ற ஆய்வுக் கூட்டங்கள் மற்றும் அமைச்சர் தலைமையிலான ஆய்வுக் கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை என கூறப்படுகிறது.

மேலும் இவர் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களை கேட்பதில்லை என கடந்த மாவட்ட ஆட்சியராக இருந்த வினீத் அவரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார். ஆனால் அந்த பணி நீக்கம் செல்லாது என மீண்டும் திருப்பூர் மாவட்ட கனிமவளத்துறை இணை இயக்குனராக வள்ளலை நியமித்து கனிமவளத்துறை இயக்குனர் ஜெயகாந்தன் நியமனம் செய்தார்.

இச்செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் கனிம வளத்துறையில் ஊழலுக்கு வழிவகுக்கும் வகையில் செயல்படும் கனிமவளத்துறை இயக்குனர் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் ஆகியோருக்கு பாராட்டு விழா நடத்துவதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிவித்திருந்தது.



அதன்படி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பாராட்டு விழா நடத்துவதற்காக ஒன்று திரண்ட விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஊழலுக்கு வழிவகுக்கும் அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். 



மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை என அவர்களை கலைந்து போகச் சொல்லி காவல்துறையினர் வலியுறுத்திய நிலையில் தொடர்ந்து கோஷங்களை எழுப்பிய அவர்களை வலுக்கட்டாயமாக காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...