கேஎம்சிஎச் சார்பில் "மொபைல் ஸ்ட்ரோக் யுனிட்" சேவை துவக்கம்


கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கேஎம்சிஎச் மருத்துவமனை இன்று உயிர்காக்கும் வசதியுடன் "மொபைல் ஸ்ட்ரோக் யுனிட்" என்னும் ஒரு புதிய ஆம்புலன்ஸ் சேவையினை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. 



இதன் துவக்க விழாவில் கேஎம்சிஎச்-யின் ரேடியாலஜி மற்றும் டையக்நாஸ்டிக் இமேஜிங் மருத்துவர் மேத்திவ் செரியன் மற்றும் துணைத் தலைவர் தவமணி டி.பழனிசாமி ஆகியோர் துவக்கவுரையாற்றினர். 



மொபைல் ஸ்ட்ரோக் யுனிட்-ஐ அறிமுகம் செய்து கேஎம்சிஎச் தலைவர் டாக்டர் நல்ல ஜி. பழனிசாமி உரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கு சைன்டிஸ்ட் கமிட்டி தலைவர் மற்றும் எஸ்ஆர்எம்சி-யின் நியூரோ- ரேடியாலஜி துறை தலைவர் டாக்டர் சந்தோஷ் ஜோசப், அமெரிக்காவின் ருஸ் மருத்துவ பல்கலைக் கழகத்தின் டிமட்ரியுஸ் லூப்ஸ், கன்னடா பூத்ஹில்ஸ் பெடிக்கல் சென்டரின் டாக்டர் மயன்க் கோயல், ஜெர்மனி ஆல்பெர்டு க்ரூப் மருத்துவமனை மருத்துவர் ரெனெ செபோட் ஆகியோர் பங்கேற்றனர். நீயூராலஜிஸ்ட் மருத்துவர் அருள்செல்வன் நன்றியுரை வழங்கினார்.



இதில், கேஎம்சிஎச் தலைவர் மருத்துவர் நல்ல ஜி.பழனிசாமி பேசுகையில், மொபைல் ஸ்ட்ரோக் யுனிடில் விரைவாக சிகிச்சை அளிக்கப்படுவதால் நோயாளி குணமடைதல் விரைவாகவும், பாதிப்புகள் குறைவாகவும் இருக்கும். இதன் மூலம் நீண்ட கால பராமரிப்பு மற்றும மறுவாழ்வு தேவையை கணிசமாக குறைப்பதே எங்களது நோக்கம்" என்றார்.

இந்த முன்மாதிரி திட்டத்தை நாடு முழுவதும் இத்தகைய மொபைல் வேண் வசதியை ஏற்படுத்த முடியுமா என்பது தான் மருத்துவ சிகிச்சை அளிக்கும் நிறுவனங்களின் பரவலான எதிர்பார்ப்பாக உள்ளது.



கேஎம்சிஎச்யில் நரம்பியல் நிபுணர்கள், குறுக்கீட்டு மருத்துவ கதிர்வீச்சு நிபுணர்கள் அடங்கிய குழு, மருத்துவர் அருண் பழனிசாமி தலைமையில் செயல்பட்டு வருகிறது. பக்கவாதத்துக்கென முன் எச்சரிக்கை முறையை உருவாக்கிய இவர், அர்ப்பணிக்கப்பட்ட ஹாட்லைன் உடன், மருத்துவமனை, மொபைல் யூனிட் இணைக்கப்பட்டு அதிவிரைவான சேவையால் பெரும் எண்ணிக்கையிலான நோயாளிகளின் உயிர்களை காக்க முடியும் என நம்புகிறேன்.

இந்த திட்டத்தை துவங்க தமிழ்நாடு சரியான மாநிலம். தமிழ்நாட்டில் படித்தோரின் சதவிகிதம் அதிகமாக உள்ளதோடு, சாலைகளும தரமானவைகளாக அமைக்கப்பட்டுள்ளது. எனவே, 100 முதல் 150 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள கிராமங்களை உரிய நேரத்தில் இந்த வாகனம் எளிதில் சென்றடையும்.

இத்தகைய வாகனத்தை அமைக்கவும், சிடி ஸ்கேன் பயணிப்பதற்கும் இந்திய அணுசக்தி துறையின் ஒத்துழைப்பும் தேவைப்பட்டது. அதோடு உயிர்காக்க உதவும் இந்த வாகனம் செல்ல காவல்துறை, சாலை போக்குவரத்துத் துறை போன்றவைகளும், வாகன பாதுகாப்பாக பயணிக்க ஒத்துழைப்பும் அளித்துள்ளன.

அதிநவீனத்துவம் பெற்ற நாடுகளிலும் சவால் மிக்க இந்த சிகிச்சை முறை மிக குறைவாகவே உள்ளன. இத்தகைய முன்னணி, சவால்மிக்க மருத்துவ சிகிச்சை முறையைக் கொண்ட நகரமாக, வரலாற்றில் கோவை நகரம் இடம் பெறும். நாடு முழுவதுக்கும் ஒரு முன்னோடி அதிநவீன சிகிச்சை அளிக்கும் நகரமாக இது திகழும் என்பதில் ஐயமில்லை" கூறினார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...