போத்தனூர் அருகே குட்கா விற்பனையில் ஈடுபட்டவர் கைது - 471 கிலோ போதைப்பொருள் பறிமுதல்!

போத்தனூர் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த சாரமேடு பகுதியை சேர்ந்த அப்துல் கரீம்(45) என்பவரை கைது செய்த போலீசார், 471 கிலோ அளவிலான போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.



கோவை: போத்தனூர் அருகே தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் கரும்புக்கடை சாரமேடு ராஜீவ் நகரை சேர்ந்த முகமது அனிபா என்பவரின் மகன் அப்துல் கரீம்(45). இவர் அந்த பகுதியில் உள்ள கடைகளுக்கு பீடி, சிகரெட் போன்ற பொருட்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். 

இந்நிலையில் அவர், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக போத்தனுர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இதையடுத்து அங்கு சென்ற போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவரது காரில் சோதனை செய்த போது புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து காரில் இருந்த 471 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார். அப்துல்கரீமை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....