ரயில்வே நடைபாதை இடத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு

கோவை, ரயில் நிலையம் வளாகம் ரயில் பாதை அருகே உள்ள 17-வது வார்டு, கடலைக்கார சந்து 3-வது வீதி இந்திரா நகரில் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் 50 குடியிருப்புகளும், 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் மக்கள் அரசாங்க அடையாள அட்டைகள் உள்ளிட்ட வரி செலுத்துவதற்கான அனைத்தையும் வைத்துள்ளனர்.

இந்நிலையில், ரயில் நடைபாதை விரிவுபடுத்த அப்பகுதிகளில் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற ரயில்வே நிர்வாகம் சார்பில் கடந்த ஜனவரி மாதம் இறுதி நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, ரயில்வே அதிகாரிகள் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றுவதற்கு வந்தபோது, அப்பகுதி குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன், சேலம் கோட்ட ரயில்வே உயர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், 15 நாட்கள் ரயில்வேயிடம் கால அவகாசம் கேட்டு அதற்கான கடிதமும் எழுதி கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையை தற்காலிகமாக ரயில்வே அதிகாரிகள் நிறுத்தினர். 

அதனைத் தொடர்ந்து, இன்று தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ஜூனன் முயற்சியில் 72-வது வார்டு பகுதியில் அப்பகுதி மக்களின் கோரிக்கையை வலியுறுத்தி வெள்ளலூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இவர்கள் வசிப்பதற்கான இருப்பிட உரிமைச் சான்றிதழ்களை 48 குடும்பங்களுக்கு வழங்கினார். உடன், குடிசை மாற்றுவாரியம் மண்டல பொறியாளர் ராஜசேகரன், கவுன்சிலர் சசிரேகா ஆகியோர் உள்ளனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...