ஐடி ரெய்டு முடிந்து அறிக்கை வெளியிடும் போது அனைவரும் கதறுவார்கள்..! - கோவை வடக்கு அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுணன் சூசகம்!

திமுக அரசை கண்டித்து தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கோவை வடக்கு எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுனன், வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்த அவர், வருமான வரித்துறை சோதனை முடிந்து அறிக்கை வெளியாகும் போது அனைவரும் கதறுவார்கள் என சூசகமாக தெரிவித்தார்.



கோவை: வருமான வரித்துறை சோதனை முடிந்து அறிக்கை வெளியாகும் போது அனைவரும் கதறுவார்கள் என கோவை வடக்கு எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுனன் தெரிவிவித்துள்ளார்.



கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில், கள்ள சாராயம், போதைப் பொருட்கள் புழக்கம் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் இந்த ஆட்சியில் நடைபெறுவதாக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.



இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை மாநகர மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏவுமான அம்மன் அர்ச்சுனன் தலைமை வகித்தார். இதில் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராமன், முன்னாள் மேயர் வேலுச்சாமி உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 



இந்த ஆர்ப்பாட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அம்மன் அர்சுணன்,



இந்த இரண்டரை ஆண்டு காலத்தில் எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது? அதுவரை வந்த வருமானம் எத்தனை என்பதை அரசு தெரியப்படுத்த வேண்டும். வருமான வரித்துறை அதிகாரிகளையே அடிக்க செல்லும் தைரியம் அவர்களுக்கு (திமுக) தான் உள்ளது. 

நாங்கள் ஏதாவது செய்தால் தமிழக அரசு எங்களை கைது செய்யும் போது, டெல்லி அரசாங்கம் இன்னும் ஏன் காத்துக் கொண்டிருக்கிறது. மேலும் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்துதல் என்ற சட்டம் தற்போது எங்கே சென்றது?. வருமானவரித் துறை சோதனைக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என அமைச்சர் கூறுகையில் எதற்காக அவரது தம்பியின் வீட்டில் சோதனை நடத்தப்படும் பொழுது அதிகாரிகளை தாக்கினார்கள்?. 

இன்னும் 10 நாட்களில் சோதனை விவரங்கள் எல்லாம் தெரியவரும், அப்போது அனைவரும் கதறுவார்கள். திமுகவின் தோழமை கட்சிகளுக்கு எல்லாம் மாதம் மாதம் கப்பம் வருவதால் அமைதியாக இருக்கிறார்கள். வைகோ எல்லாம் எங்கே சென்றார்?.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....