சென்னை சூப்பர் கிங்ஸ் தான் எனக்கு பிடித்த அணி - சத்குரு பேசும் வீடியோ மீண்டும் வைரல்!

நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்றைய போட்டியில் சென்னை - குஜராத் அணிகள் மோதும் நிலையில், தனக்குப் பிடித்த அணி சென்னை சூப்பர் கிங்ஸ் தான் என ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசும் வீடியோ தற்போது மீண்டும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கோவை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தான் தனக்கு மிகவும் பிடிக்கும் என ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசும் வீடியோ மீண்டும் வைரலாகி வருகிறது.

நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன.

இதன் காரணமாக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஐபிஎல் ஃபீவர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈஷா யோகா மைய நிறுவன சத்குரு ஜக்கி வாசுதேவ் தனது விருப்பமான அணியாக சென்னை சூப்பர் கிங்ஸை ஆதரிக்கும் பழைய வீடியோ தற்போது மீண்டும் வைரலாகி உள்ளது.

இந்தக் காணொளியில், மேற்கிந்திய கிரிக்கெட்டின் அடையாளமான ‘தி யுனிவர்ஸ் பாஸ்’ கிறிஸ் கெய்ல் சத்குருவிடம், “உங்களுக்குப் பிடித்த ஐபிஎல் அணி எது?” என்று கேட்கிறார். சத்குரு தனக்கே உரித்தான வெடிச்சிரிப்புடன், “நிச்சயமாக சென்னை அணிதான்,” என்கிறார்.

KKR அணியினர் தனது ஆசிகள் வேண்டி தன்னை நாடிய ஒரு நகைச்சுவையான சம்பவத்தைப் பற்றி சத்குரு சொல்லும்போது, “கடந்த முறை KKR அணி இறுதிப் போட்டியில் இருந்தபோது, அவர்கள் என்னை அழைத்து, சத்குரு, நீங்கள் எங்கள் அணியை ஆசீர்வதிக்க வேண்டும் என்றனர்.

அப்போது யாருக்கு எதிராக விளையாடுகிறீர்கள் என்று நான் கேட்டதற்கு அவர்கள், ‘சென்னை அணிக்கு எதிராக’ என்றார்கள். நான் சொன்னேன், ‘அப்படியென்றால், இது ஒன்று மட்டும் என்னால் செய்ய முடியாது,” என்றேன் என சத்குரு சொல்ல., கெய்லும் சத்குருவும் சிரிக்கின்றனர்.

வீடியோவின் இறுதிப் பகுதியில், ஐபிஎல்-லில் கண்டிப்பாக ‘சென்னை தான் நம்பர் ஒன் டீம்’ என்று கிறிஸ் கெய்ல் கருத்துத் தெரிவிக்கிறார், அதற்கு சத்குரு, ‘தோனி மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்’ என்று குறிப்பிடுகிறார்.

தற்போதைய ஐபிஎல் சீசனில், சத்குரு RCB மற்றும் CSK அணிகளை உற்சாகப்படுத்துவதைக் காண முடிந்தது.

இந்த நிலையில் சத்குரு ஜக்கி வாசுதேவ் குறிப்பிட்ட இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது மீண்டும் வைரலாக பரவி வருகிறது.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....