அ.தி.மு.க தொண்டர்கள் எனக்கூறி பீடா கடையில் பிரச்சனை செய்த இருவர் கைது

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (39). இவர் கிழக்கு ஆரோக்கிய சாமி சாலை பகுதியில் பீடா கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இவரது கடைக்கு வந்த ஒரு கும்பல் பீடா வாங்கியது. அதற்கான பணத்தை இளங்கோவன் கேட்டதற்கு அவர்கள், தங்களை அ.தி.மு.க உறுப்பினர்கள் என்று கூறியதுடன் இளங்கோவனை தாக்கியதாக கூறப்படுகிறது. பிரச்சனை நடப்பதை அறிந்த அப்பகுதி மக்கள் தடுக்க முற்பட்டபோது அவர்களையும் தாக்கியதாக தெரிகிறது. 

இது குறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர், அ.தி.மு.க பிரமுகர் என்று கூறி பிரச்சனை செய்த செல்வபுரத்தை  அடுத்த ரங்கசாமி காலனி பகுதியை சேர்ந்த முருகேசன் (40) என்பவரையும் தியாகராயர் வீதியை சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...