அதிக விலைக்கு மது விற்கப்படுவதாக எழுந்த புகார் - திருப்பூரில் டாஸ்மாக் கடையின் புது ஐடியா!

திருப்பூர் மாவட்டம் இடுவாய் அருகேயுள்ள டாஸ்மாக் மதுபான கடையில் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரினை தொடர்ந்து, மது வாங்க வருபவரின் வயதை அறிந்த பின்னர், பாட்டில்களுக்கு ரசீது வழங்கி மது பாட்டில்களை விற்பனை செய்யப்படுகிறது.


திருப்பூர்: திருப்பூர் அருகேயுள்ள இடுவாய் பகுதியில் அதிக விலைக்கு மது விற்பனை செய்வதாக எழுந்த புகாரை தொடர்ந்து, ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரசீது போட்டு மது விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருப்பூர் அருகே இடுவாய் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் மதுபாட்டிலுக்கு முப்பது ரூபாய் கூடுதலாக பெறப்படுவதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் மதுக்கடையில் பீர் இருப்பு இல்லை என்று கூறப்பட்ட நிலையில் அந்த கடையில் அமைந்துள்ள பாரில் கூடுதல் விலைக்கு பீர் விற்பனை செய்யப்படுகிறது என்ற புகாரும் எழுந்தது.



இதனால் கட்சி சார்பற்ற விவசாய சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் அந்த மதுக்கடையை முற்றுகையிட்டு கடை ஊழியர்களிடம் இது குறித்து விளக்கம் கேட்டனர். 

இதனால் அங்கு நீண்ட நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. உரிய வகையில் விற்பனை நடத்த வேண்டும் முறைகேடுகள் குறித்து தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. ஆதாரங்களுடன் மாவட்ட நிர்வாகம் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்படும் என விவசாய சங்கத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



இந்நிலையில் இன்று முதல் இடுவாயில் இயங்கி வரும் அரசு மதுபான கடையில் மது வாங்க வருவோரின் வயது என்ன என்பதை விசாரித்த பிறகு மது பாட்டில் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரசீது வழங்கி மது பாட்டில்களை விற்பனை செய்து வருகின்றனர்.



கடை ஆரம்பித்த நாளிலிருந்து ரசீது போட்டு மது பாட்டில் விற்பனை செய்வது இதுவே முதல் முறை என அப்பகுதி மது பிரியர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பாட்டில் ஒன்றுக்கு கூடுதலாக 20 ரூபாய் வாங்கி வந்த நிலையில் இதே போன்று ரசீது வழங்கி மது பாட்டில்களை அனைத்து மதுபான கடைகளிலும் விற்பனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...