கோவை அருகே ஆசிரியர் கண்டித்ததால் கல்லூரி மாணவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி - பரபரப்பு!

கோவை கே.ஜி.சாவடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த கேரளாவை சேர்ந்த அம்ஜத் அகமது (19) என்ற மாணவர், தேர்வில் காப்பி அடித்ததால் பெற்றோரை அழைத்து வர கூறியுள்ளனர். இதனால் விரக்தியடைந்த மாணவர் கல்லூரியின் 2வது மாடியில் இருந்து குதித்ததில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவை மாவட்டம் வேலந்தாவளம் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரியில், ஆசிரியர் கண்டித்ததால் மாணவர் மாடியில் இருந்து குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் அம்ஜத் அகமது (19). இவர் கோவை அருகே கே.ஜி.சாவடி பகுதியில் உள்ள தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு கல்லூரியில் மாதிரி தேர்வு நடைபெற்றது.

அப்போது மாணவர் அம்ஜத் அகமது, தேர்வு எழுதும் போது காப்பி அடித்ததாக தெரிகிறது. இதனை தேர்வு மையத்தில் பணியில் இருந்த 2 பேராசிரியர்கள் பார்த்து மாணவரை தேர்வு மையத்தில் இருந்து வெளியே அனுப்பினர். மேலும் தேர்வில் காப்பியடித்தற்காக மாணவரிடம் பெற்றோரை அழைத்து கொண்டு கல்லூரிக்கு வர வேண்டும் என கூறியுள்ளனர்.

இதனால் விரக்தியடைந்த மாணவர் திடீரென 80 அடி உயரம் கொண்ட கல்லூரியின் 2-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் அவருக்கு இடுப்பு மற்றும் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. மாணவரை கல்லூரி நிர்வாகத்தினர் மீட்டு கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, தகவலறிந்ததும் கே.ஜி.சாவடி போலீசார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர். இதனிடையே கல்லூரி மாணவரை பெற்றோரை அழைத்து வர கட்டாயபடுத்தி மிரட்டிய ஆசிரியர் சீனிவாசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...