உதகை செல்ல முடியாமல் தவிக்கும் பொது மக்கள் - போதிய அரசு பேருந்து வசதி இல்லை என குற்றச்சாட்டு

கோடை விடுமுறையில் ஏராளமான மக்கள் சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்து வரும் நிலையில், சாய்பாபா கோயில் பகுதியில் இருந்து உதகைக்கு போதிய அரசு பேருந்து வசதி இல்லாததால், சுற்றுலா பயணிகள் பலரும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாக வேதனை தெரிவித்துள்ளனர்.



கோவை: சாய்பாபா கோவில் பகுதியில் இருந்து உதகைக்கு போதிய பேருந்து வசதி இல்லாததால், பொதுமக்கள் பலமணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். 

குழந்தைகளுக்கு பள்ளிகள் விடுமுறை என்பதாலும் கோடை வெயில் அதிகமாக இருப்பதாலும் சுற்றுலா பயணிகள் உதகை மற்றும் கோத்தகிரி படையெடுத்து வருகின்றனர். இந்த நிலையில், சாய்பாபா கோயில் பகுதியில் இருந்து அரசு பேருந்து கோவையில் இருந்து உதகை செல்கிறது. 



இதனிடையே போதிய அரசு பயணிகள் பேருந்து இல்லாததால் உதகைக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தவித்து வருகின்றனர். இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள், அரை மணி நேரத்திற்கு ஒருமுறை அரசு பேருந்து இயக்கப்படுகிறது என கூறுகின்றனர். 



ஆனால் ஒரு மணி நேரம் காத்திருந்தும், அரசு பேருந்து வரவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அங்கு பயணிகள் பேருந்து வந்தவுடன் அங்குள்ள பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு அந்த வண்டியில் ஏறுவது வாடிக்கையாகி வருகிறது. 



இதனால் அதிகமான அரசு பேருந்துகளை உதகைக்கு இயக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....