கோவை அருகே குடிபோதையில் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய இருவர் கைது

கோவை மாவட்டம் வேடப்பட்டியில் மதுபோதையில் அரசு பேருந்து ஓட்டுநர் விஜயகுமார்(48) மற்றும் நடத்துநரை தாக்கிய பூச்சியூரை சேர்ந்த ராகவன் (20), சுண்டபாளையத்தை சேர்ந்த கார்த்திக் (20) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


கோவை: வேடப்பட்டியில் அரசுப்பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் வேடப்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார் (48). இவர் அரசுப் போக்குவரத்து கழகம் உக்கடம் கிளையில் ஓட்டுநராக உள்ளார். சம்பவத்தன்று இவர் டவுன்ஹாலில் இருந்து குப்பேபாளையம் நோக்கி சென்ற அரசு பேருந்தை ஓட்டிச் சென்றார்.

பேருந்து கலிக்கநாயக்கன் பாளையம் அருகே வளைவில் சென்ற போது 3 பேர் மது போதையில் சத்தம் போட்டபடி நடுரோட்டில் வந்தனர். இதனைப் பார்த்த ஓட்டுநர் விஜயகுமார் ஹாரன் அடித்தார்.

ஆனால் அவர்கள் ரோட்டை விட்டு விலகாமல் தகராறு செய்தனர். பின்னர் அவர்கள் ஓட்டுநர் மற்றும் நடத்துனரை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். காயமடைந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்று முதலுதவி சிகிச்சை பெற்றனர்.

பின்னர் இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துநரை தாக்கிய பூச்சியூரை சேர்ந்த ராகவன் (20), சுண்டபாளையத்தை சேர்ந்த கார்த்திக் (20) ஆகியோரை கைது செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட 2 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....