கோவையில் இரவு நேரங்களில் உலா வரும் பைக் திருடர்கள் - அச்சத்தில் பொதுமக்கள்!

விளாங்குறிச்சி ரோடு சேரன் மாநகரில் உள்ள வணிக வளாகத்தின் முன்பு நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்த சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு, போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.



கோவை: வெள்ளலூர் அருகே வணிக வளாகத்தின் முன்பு நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வெள்ளலூர் பகுதியை சேர்ந்த அந்தோணிதாஸ் என்பவரது மகன் ஜெபா டானியல் (28). இவர் கோவை விளாங்குறிச்சி சாலை சேரன் மாநகர் பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் வளர்ப்பு மீன் கடை நடத்தி வருகிறார். 

இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி ஜெபாடேனியல் வழக்கம் போல தனியார் வணிக வளாகத்தில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, முதல் தளத்தில் உள்ள தன்னுடைய கடைக்குச் சென்றுள்ளார். இரவு முழுவதும் அங்கிருந்த ஜெபடானியல் மறுநாள் மதியம் கீழே வந்து பார்த்தபோது, அவரது இரு சக்கர வாகனம் மாயமானது தெரியவந்தது.

இதையடுத்து அவர் பீளமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், முதல் கட்டமாக அங்கு பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.



அப்போது அங்கு மற்றொரு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தும் முகத்தில் முகமூடி அணிந்தும் வந்த மூன்று இளைஞர்கள், ஜெபா டானியலின் இருசக்கர வாகனத்தின் லாக்கை உடைத்து இருசக்கர வாகனத்தை திருடி சென்றது தெரியவந்தது. 

இந்நிலையில் இருசக்கர வாகனங்களை திருடும் மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....