கோவையில் 17 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது!

கோவை சாந்திமேடு அருகே 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கர்ப்பமாக்கிய இளைஞரை துடியலூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார், போக்சோ சட்டத்தின் கிழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



கோவை: கோவை மாவட்டம் துடியலூர் அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

கோவை சாந்திமேடு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி 9ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவருக்கு தாய், தந்தை இல்லை என்பதால், இவர் தனது தாத்தா, பாட்டி வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் அந்த சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த சாத்தப்பன் (31) என்பவர் மிஸ்டு கால் மூலமாக நண்பராக பழகியுள்ளர். சம்பவத்தன்று சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது அங்கு சென்ற சாத்தப்பன் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார்.

பின்னர் அவரை கோவைக்கு அழைத்து வந்து திருமணம் செய்து ஒராண்டாக கணவன் -மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். இதன் காரணமாக சிறுமி கர்ப்பமானதாக தெரிகிறது. இதனையறிந்த ஒருவர் துடியலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார்.

இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....