10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - 91.39 சதவீத மாணவ - மாணவிகள் தேர்ச்சி!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில், 91.39 சதவீத மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில், அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 97.67 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், கணித பாடத்தில் 3,649 பேர் 100 சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.



சென்னை: 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், 91.39 சதவீத மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வினை தமிழகத்தில், மொத்தம் 9 லட்சத்து 38 ஆயிரத்து 291 மாணவ, மாணவியர் எழுதினர்.

இந்நிலையில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு பள்ளிக்கல்வித்துறையின் இணையதளங்களில் வெளியிடப்பட்டது. http://www.tnresults.nic.in மற்றும் http://www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மாணவர்கள் முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.39 சதவீத மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 9,14, 320 மாணவ மாணவிகளில் 8,35,614 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், எப்போதும் போலவே இந்தாண்டும் தேர்ச்சி சதவீதத்தில் மாணவர்களை விட மாணவிகள் 6.5 சதவீதம் அதிகம்.

இந்நிலையில், இந்த தேர்வில், ஆங்கிலம் பாடத்தில் 89 பேரும், கணிதம் பாடத்தில் 3,649 பேரும், அறிவியல் பாடத்தில் 3,584 பேரும், சமூக அறிவியலில் 320 பேரும் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். மேலும், மொழிப்பாடத்தில் யாரும் 100சதவீத மதிப்பெண்களை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழகத்திலேயே அதிகபட்சமாக 97.67 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.

இதேபோல், சிவகங்கை மாவட்டம் 97.53 சதவீத தேர்ச்சியுடன் 2ஆம் இடத்திலும், விருதுநகர் மாவட்டம் 96.22 சதவீத தேர்ச்சியுடன் 3ஆம் இடத்திலும், கன்னியாகுமரி மாவட்டம் 95.99 சதவீத தேர்ச்சியுடன் 4ஆம் இடத்திலும், மேலும் தூத்துக்குடி மாவட்டம் 95.58 சதவீத தேர்ச்சியுடன் 5ஆம் இடத்திலும் உள்ளது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான துணைத்தேர்வு வரும் ஜூன் மாதத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....