கோவை ராஜ வீதியில் கத்தி முனையில் 4.5 கிலோ தங்கம் கொள்ளை.


கோவை ராஜ வீதியில் உள்ள நகைக்கல் கடையில் புகுந்த நபர்கள் கத்தி முனையில் 4.5 கிலோ தங்க நகைகளை பறித்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பெரிய கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் ராஜ வீதி பகுதியில் தங்க நகை மொத்த வியாபரம் செய்து வருகிறார்.



சந்திரசேகரின் கடையில் ஒட்டுநர் ரியாசுதின் உள்ளிட்ட 4 பேர் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் இன்று மாலை சந்திரசேகர் வீட்டிற்கு சென்றிருந்த நேரத்தில் ரியாசுதீன் மற்றும் முகமூடி அணிந்த இரு மர்ம நபர்கள் கடைக்குள் நுழைந்தனர். அப்போது, ஊழியர்கள் கீதா, ரேவதி என்ற இரு பெண்கள் பணியில் இருந்தனர்.

தொடர்ந்து, ரியாசுதின் மற்றும் முகமூடி அணிந்து வந்த இரண்டு பேர் கத்தியை காட்டி மிரட்டி பெண்களை மிரட்டியதோடு கண்களை மூட கூறினர். பின்னர், கடையில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். 4.5 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதாகவும், அதன் மதிப்பு ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் இருக்குமெனவும் கூறப்படுகிறது. 

இதைத்தொடர்ந்து, கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க்கையும் கொள்ளையர்கள் எடுத்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து, பணியில் இருந்த பெண்கள்  சந்திரசேகருக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து, அவர் அளித்த புகாரின் பேரில், வெரைட்டி ஹால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ராஜவீதி முக்கிய பகுதி என்பதால் அங்கு பல இடங்களில் காவல் துறையினர் கண்காணிப்பு காமிராக்களை அமைத்துள்ளனர். அதோடு, கொள்ளை நடந்த இடத்தின் அருகில் தனியார் வைத்திருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் கொண்டு போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

பட்டப்பகலில் கோவையில் மையப்பகுதியில் நடந்த இந்த துணிகரக்கொள்ளை அப்பகுதியில் நகைக்கடை வைத்திருக்கும் வியாபாரிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...