ஜல்லிக்கட்டு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு - கார்த்திகேய சிவசேனாதிபதி வரவேற்பு!

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்திற்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக சேனாதிபதி கால்நடை ஆராய்ச்சி மையத்தின் நிர்வாக அறங்காவலரும் , அயலகத் தமிழர் நலவாரிய தலைவருமான கார்த்திகேய சிவ சேனாதிபதி தெரிவித்துள்ளார்.


கோவை: ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக டெல்லி உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற அந்த வழக்கு விசாரணை நிறைவடைந்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை இல்லை எனவும் தமிழக அரசு கொண்டுவந்த அவசர சட்டம் ரத்து செய்யப்படாது எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து பேசிய காங்கேயம் சேனாதிபதி கால்நடை ஆராய்ச்சி மையத்தின் நிர்வாக அறங்காவலரும், அயலக தமிழர் நல வாரியத் தலைவருமான கார்த்திகேய சிவ சேனாதிபதி, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழக கலாச்சாரத்திற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.

இதற்காக எத்தனையோபேர் சட்டரீதியாக போராடி வந்தனர். அதில் சிறிய அளவு நானும் பங்கு செலுத்தி இருப்பது தற்போது மகிழ்ச்சி அளிக்கிறது. 2006 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதியும்,

2021 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக பொறுப்பேற்ற மு. க. ஸ்டாலினும் தொடர்ந்து ஜல்லிக்கட்டு தொடர்பான சட்ட விவரங்களை கேட்டு அதில் வெற்றி பெறத் தேவையான வாதங்களை முன்வைத்தனர். தற்போது தீர்ப்பு நமக்கு சாதகமாக வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...