வார்டு எண் 17யில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ரூ.74 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட மாநகராட்சி பூங்கா.

கோவை மாவட்டம் மேற்கு மண்டலம், வடவள்ளி, 17வது வார்டுக்குட்பட்ட குருசாமி நகர் பகுதியில் புதுப்பிக்கப்படாமல் இருந்த மாநகராட்சி பூங்கா தற்போது ரூ.74 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இரண்டு மாதங்களாக நடைபெறும் பூங்காப் பணியினை நேற்று கோயமுத்தூர் மாவட்ட மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான விஜயகார்த்திகேயன் மற்றும் துணை ஆணையர் காந்திமதி ஆகியோர் நேரில் சென்று மாநகராட்சி பூங்காவினை பார்வையிட்டனர்.



இது குறித்து கோவை மாநகராட்சி மேற்கு மண்டல உதவி செயற்பொறியாளரிடம் பேசுகையில்; வடவள்ளி 17வது வார்டு பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்கா 1800 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. இப்பூங்காவின் பராமறிப்பு பணிகள் தற்போது நடந்து வருகிறது. இரண்டு மாதங்களாக நடைபெற்று வரும் பூங்கா பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. இன்னும் 10 நாட்களில் இப்பூங்காவின் பணிகள் முழுவதும் நிறைவடைந்து மாநகராட்சி பூங்கா விரைவில் திறக்கப்படும். தற்போது குருசாமி நகர் மாநகராட்சி பூங்காவில் பொதுமக்கள் நடத்து செல்லும் நடைபாதை விரிவாக்கப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கான விளையாட்டு பூங்கா, இளைஞர்கள் இறகு பந்து விளையாடுவதற்கான தனி இடம், முதியவர்கள் அமருவதற்கு இருப்பிடம், பூங்காவின் சுற்று வட்டாரத்தில் 6 எல்.இ.டி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பூங்காவிற்கு சுற்று புறத்திலும் பாதுகாப்பு சுவர் அமைக்கப்படும் வெளிப்புறத்தில் இருசக்கர வாகனத்திற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இரண்டு கழிவறைகள் மற்றும் குடிநீர் வசதிகள் போன்றவற்றை செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.



இது குறித்து பொதுமக்களிடம் கேட்ட போது; ஆறு மாதங்களுக்கும் மேலாக எங்கள் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்கா பராமறிக்கப்படாமல் இருந்தது. புதற்கடுகளாக இருந்த இப்பகுதியை விரைவில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து  மாநகராட்சியிடம் மனு அளித்தனர். இல்லையென்றால் நாங்கள் எங்கள் பகுதியை பரமாறித்து கொள்வதாக கூறிய பின்னர், மாநகராட்சி தற்போது பூங்கா பணியினை விரைவில் செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தற்போது இப்பூங்காவிற்கு அதிக அளவில் வந்து செல்கின்றனர். இப்பூங்கா காலை 6 மணி முதல் 9 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறக்கப்படுகிறது. இவ்வாறு அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.



Newsletter

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...