பொள்ளாச்சி வனக்கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் யானைகள் கணக்கெடுக்கும் பணி துவக்கம்

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி மற்றும் உடுமலை வன கோட்டத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி வால்பாறை, உலாந்தி, மானாம்பள்ளி  ஆகிய நான்கு வனச்சரகங்களில் இன்று முதல் 3 நாட்கள் யானைகள் கணக்கெடுக்கும் பணி இன்று துவங்கியது.


கோவை: ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக்கோட்டத்திற்குட்பட்ட நான்கு வனச்சரகங்களில் யானைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி மற்றும் உடுமலை வன கோட்டத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி வால்பாறை, உலாந்தி, மானாம்பள்ளிஆகிய நான்கு வனச்சரகங்களில் இன்று முதல் 3 நாட்கள் யானைகள் கணக்கெடுக்கும் பணி இன்று துவங்கியது.



யானைகள் கணக்கெடுக்கும் பணியில் வனக்காப்பாளர் தலைமையில் வேட்டை தடுப்பு காவலர்கள் உட்பட குழுவுக்கு 4 பேர் வீதம் 34 குழுக்களாக 136 பேர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.முதல்நாள் நேரடியாக காண்பது, 2ம் நாள் நேர்கோட்டு பாதையில் 2 கிமீ தூரம் சென்று காண்பது, 3வது நாள் நீர்நிலைகள் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் நேரடியாக காண்பது என்ற அடிப்படையில் யானைகள் கணக்கெடுக்கப்படுகின்றன.



இன்று முதல் மூன்று நாட்கள் தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் ஒரே நேரங்களில் இந்த கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுவதாகவும் மூன்று நாட்கள் கணக்கெடுப்புக்கு பின் அறிக்கையை முதுமலை புலிகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....