துடியலூர் மாகாளியம்மன், மாரியம்மன் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜை!

கோவை துடியலூரில் உள்ள மாகாளியம்மன், மாரியம்மன் திருக்கோவில் சிறப்பு அலங்கார பூஜைக்காக வடமதுரை மாரியம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள விநாயகர் சன்னதியில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: துடியலூர் மாகாளியம்மன், மாரியம்மன் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது.

கோவை துடியலூரில் உள்ள அருள்மிகு மாகாளியம்மன்,அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் உள்ளது.

இக்கோவிலில் சிறப்பு அலங்கார பூஜை நேற்று நடைபெற்றது.



இதில் அருள்மிகு மாரியம்மன், மாகாளியம்மன், விநாயகர், கருப்புராயன், கன்னிமார் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார தீப ஆராதனை வழிபாடு நடைபெற்றது.

முன்னதாக வடமதுரை மாரியம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள பழம்பெரும் விநாயகர் கோவில் சன்னதியிலிருந்து தீர்த்துக் குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் புனித நீர் எடுத்து வந்தனர்.

தீர்த்தக்கடை ஊர்வலம் வடமதுரையிலிருந்து மேட்டுப்பாளையம் சாலை வழியாக துடியலூர் உள்ள கோவிலை வந்தடைந்தது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...