கோவையில் நடைபயிற்சிக்கு சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு - இருவர் கைது

கோவை ஜி.வி. ரெசிடென்ஸி அருகே கௌசல்யா என்பவர் நடைபயிற்சியில் ஈடுபட்ட போது, காரில் வந்த கொள்ளையர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்கச் முயன்ற சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், புகாரின் பேரில் இருவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை:ஜி.வி.ரெசிடென்ஸி அருகே காரில் வந்து பெண்ணிடம் செயினை பறிக்க முயன்ற இருவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை பீளமேடு ஹட்கோ காலணியை சேர்ந்தவர் கவுசல்யா. இவர் நேற்று காலை ஜி.வி.ரெசிடென்ஸி அருகே நடைபயிற்சில் ஈடுபட்ட போது, காரில் வந்த மர்ம நபர்கள், அவர் கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்க முயன்றனர். அப்போது கவுசல்யா சுதாரித்து செயினை பிடித்துக் கொண்டதால், சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு உயிர் தப்பினார்.



இந்த சம்பவம் தொடர்பான புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில் சிசிடிவி காட்சிகளை வைத்து, கோவை விமான நிலையம் அருகே பதுங்கி இருந்த 2 பேரை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

இதுதொடர்பாக மாநகர காவல் துணை ஆணையர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியவாதவது, ஜி.வி.ரெசிடென்ஸி பகுதியில் கவுசல்யா என்ற பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை பிடிக்க சிங்காநல்லூர் சரக உதவி ஆணையர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது.

எந்த தடயமும் இல்லாத நிலையில் சிசிடிவி காட்சிகளை வைத்தே பின் தொடர்ந்து தனிப்படை போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அபிஷேக்குமார் (28) திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர். கோவையில் தங்கி ஸ்விக்கி உணவு டெலிவரி நிறுவனத்தில் பணியாற்றி வருவதும், இவர் மீது செயின் பறிப்பு வழக்கு உள்ளதும் தெரியவந்துள்ளது.

காரை ஓட்டிவந்தவர் தர்மபுரியை சேர்ந்த சக்திவேல் (28) என்பதும், டாக்ஸி ஓட்டி வருவதும் தெரியவந்துள்ளது. இவர்கள் காரில் இருந்த இரண்டு நம்பர் பிளேட்டை அகற்றி விட்டு செயினை பறிக்க முயன்றனர்.



பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராகாட்சிகளை பின் தொடர்ந்து இறுதியாக் அதிகாலையில் விமான நிலையம் அருகே அறையில் தங்கியிருந்த இருவரையும் தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.



அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.இருசக்கர வாகனத்தில் வந்து செயின் பறிப்போரை கட்டுப்படுத்த ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளதால் காரி்ல் சென்று செயினை பறிக்க முயன்றுள்ளனர். சிசிடிவி கேமராக்கள் தான் தற்போதைய குற்றவாளிகளை பிடிக்க உதவியாக இருந்தது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...