பொள்ளாச்சியில் அடுத்தடுத்த கடைகளில் கொள்ளை - போலீசார் விசாரணை!

பொள்ளாச்சி பாலகோபாலபுரம் வீதியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் உள்ள 2 ஜெராக்ஸ் கடைகள் மற்றும் பாத்திரக் கடை ஒன்றின் பூடைத்து உடைத்து மர்மநபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: பொள்ளாச்சியில் அரங்கேறியுள்ள அடுத்தடுத்த கொள்ளை சம்பவம் பொதுமக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாலகோபாலபுரம் வீதியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் செந்தில்குமார் என்பவர் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இன்று காலை கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது கல்லா பெட்டியில் இருந்த ரூ.2 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. மேலும் அவரது கடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

இதேபோல், அருகிலுள்ள சகாயராஜ் என்பவரது ஜெராக்ஸ் கடையின் பூட்டை உடைத்து கடையில் இருந்த ரூ.4000 பணத்தையும் திருடி சென்ற மர்மநபர்கள், அடுத்த தெருவில் ஒரு பாத்திர கடையின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுட்டுள்ளனர்.

இது குறித்து கடை உரிமையாளர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்த்து அங்கு விரைந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் தடயங்களை ஆய்வு செய்து பணத்தை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...