கேஎம்சிஎச்-யில் நரம்பு இடையீட்டு மருத்துவ சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்கும் இரண்டாவது ஆண்டு மாநாடு துவக்கம்

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை (கேஎம்சிஎச்) நரம்பியல் மருத்துவர்கள் சமீப ஆண்டுகளாக ரேடியோலஜி தொழில்நுட்ப இடையீட்டு மருத்துவ முறைக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு ரேடியோலஜி இடையீட்டுத் துறையும் மாறி வருகின்றன.

குறைந்த அளவு கருவிகளைக் கொண்டு அதிநவீன நரம்பு இடையீட்டு சிகிச்சைகளை மேற்கொள்ள, மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள், மருந்துகள் போன்றவையும் சமீபகாலத்தில் சுலபமாக கிடைக்கின்றன.

உலக அளவில் நிபுணர்கள் மேற்கொள்ளப்படும் நரம்பு மருத்துவ இடையீட்டு கதிர்வீச்சு மருத்துவ துறைமாறி வரும் சர்வதேச சூழலுக்கு ஏற்ப தகவல்களை அறிந்தும், அறிந்தவற்றை பிற மருத்துவர்களுடன் பகிர்ந்து கொண்டும் சிகிச்சை மேற்கொள்கின்றனர்.

இவற்றை இயக்கி வரும் கதிர்வீச்சியல் மற்றும் இடையீட்டியல்துறை தலைவர் மருத்துவர் மாத்யு செரியன், கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் மார்ச் 2 முதல் மார்ச் 4, 2017 வரை நரம்பு பாதிப்பு சிகிச்சை சங்கத்தின் இரண்டாம் ஆண்டு மாநாட்டினை நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த சர்வதேச மாநாட்டில் அமெரிக்காவைச் சேர்ந்த ருஸ் பல்கலைக கழக மருத்துவ மையம் மருத்துவர் டெமட்ரியஸ் லேபேஜ், மருத்துவர் டொனால்ட் பிரான்சிஸ் டென்வர், இத்தாலியைச் சேர்ந்த மருத்துவர் எடராடோபொகார்டி, கனடாவைச் சேர்ந்த மருத்துவர் மயன்க்கோயல், அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் மைக்கல் மாவாட், துருக்கியைச் சேர்ந்த மருத்துவர் நாசி கோசர், ஜெர்மனி சேர்ந்த மருத்துவர் ரெனே சாபட், மருத்துவர் ஹான்ஸ் ஹென்கஸ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இவர்களுடன் நரம்பியல் கதிவீர்ச்சில் நிபுணத்துவம் பெற்ற 50 இந்திய மருத்துவர்கள், நரம்பியல் பிரிவு விரிவுரையாளர்கள், பங்கேற்று பயிற்சியும் கருத்தரங்களையும் நடத்தவுள்ளனர். 

நியுரோ இன்டர்வென்ஷன் துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்ற கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையின் இன்டர்வென்ஷனல் கதிர்வீச்சு துறையின் தலைவர் மருத்துவர் மேத்யு செரியன், இந்த மாநாட்டின் ஒருங்கிணைப்பு செயலாளராக பொறுப்பேற்று நடத்துகிறார். 

இந்த ஆண்டு மாநாட்டின் துவக்க நிகழ்வில் தலைமை விருந்தினராக பங்கேற்கும் இத்தாலி, மிலன் நகரில் இருந்து வரும் மருத்துவர் எடராடோபொகார்டி, சர்வதேச அளவிலான விரிவுரை வழங்குகிறார். இவர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த துறையில் கற்றுத்தேர்ந்த அனுபவசாலி என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...