விடுதலை இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும்? - அப்டேட் கொடுத்த நடிகர் சூரி!

கோவை மாவட்டம் சூலூர் அருகே கல்லூரி ஆண்டு விழாவில் பங்கேற்ற நடிகர் சூரி, மாணவர்களின் கேள்விக்கு பதில் அளித்த போது, விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் வரும் அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என்றும் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் 13 பரோட்டாக்களை சாப்பிட்டதாகவும் தெரிவித்தார்.


கோவை: சூலூர் அருகே உள்ள தனியார் கல்லூரியின் ஆண்டு விழாவில் நடிகர் சூரி பங்கேற்று மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

கோவை சூலூர் அருகே உள்ள கருமத்தம்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் சூரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்லூரியில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.



பின்னர் மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் எத்தனை பரோட்டா சாப்பிட்டீர்கள் என்ற மாணவர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த நடிகர் சூரி, வெண்ணிலா கபடி குழு படத்தில் 13 புரோட்டா மட்டுமே சாப்பிட்டேன், டைரக்டர் சிறப்பாக அந்த காட்சி அமைய வேண்டும் என்பதற்காக காலை முதல் எதுவும் சாப்பிட கூடாது என சொல்லிவிட்டார். அதனால் 13 புரோட்டாக்கள் வரை சாப்பிட முடிந்தது என்றார்.

பெண்களை தொட்டு நடித்த பழக்கமே இல்லாததால் விடுதலை படத்தில் பவானி மேல் கை வைக்கும் அந்த காட்சி வரும் பொழுது அதிகமாக பதற்றப்பட்டேன். அதனால் அந்த காட்சி 12 முறைக்கு மேல் எடுக்கப்பட்டது. படத்தில் கதைக்கு ஒத்து வந்தால் ரொமான்ஸ் செய்ய தயாராக இருக்கிறேன். விடுதலைப் படத்தில் நடித்ததற்காக எல்லா நடிகர்களும் எனக்கு வாழ்த்துக்கள் சொன்னார்கள்.

குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் படத்தை பார்த்துவிட்டு இரவு 11 மணிக்கு போன் செய்து எனக்கு வாழ்த்து சொன்ன தருணம் மறக்க முடியாத ஒன்று என் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் சூப்பர் ஸ்டார் வாழ்த்து செய்ததை கண்டு மகிழ்ந்தோம் படத்தில் குமரேசனாக வாழ்ந்திருக்கிறீர்கள். படம் முழுவதும் அதுதான் வெளிப்பட்டுள்ளது உங்கள் வளர்ச்சிக்கு கடவுள் துணை நிற்பார் கடவுள் அனைத்தையும் கொடுப்பார் என்று பாராட்டினார்.

விடுதலை பார்ட் 2 அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும். சூரி நடனம் செய்தால் யாராலும் பார்க்க முடியாது. நடிகர் அஜித்தின் படத்தில் நடித்த பின்பு தான் எனக்கு வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட பட வாய்ப்புகள் கிடைத்தது.

அஜித் சார் என்னிடம் பேசும் போது யார் எது சொன்னாலும் மற்றவர்கள் குறித்து கவலை கொள்ள வேண்டாம். உங்களை நீங்கள் மதிக்க வேண்டும் மாணவர்களுக்கு எது சரியென படுகிறதோ அதனை மாணவர்கள் செய்ய வேண்டும் எப்போதும் ஜாலியாக இருக்க வேண்டும்.

இவ்வாறு நடிகர் சூரி மாணவர்கள் மத்தியில் பேசினார்.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....