அக்காமலை எஸ்டேட் புனித அந்தோணியார் ஆலய ஆடம்பர தேர்பவனி - திரளான பக்தர்கள் பங்கேற்பு!

வால்பாறை அருகேயுள்ள அக்காமலை எஸ்டேட் பகுதியில் உள்ள புனித அந்தோணியார் ஆலய ஆடம்பர தேர்பவனி விழாவில், உள்ளூர், வெளியூர் என பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்று வழிபாடு செய்தனர்.



கோவை: வால்பாறை அக்காமலை எஸ்டேட் புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் பகுதியில் பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் உள்ளது. இந்த ஆலயத்தின் தேர்த்திருவிழா கடந்த 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.



அதைத்தொடர்ந்து கடந்த 13 ஆம் தேதியன்று மாலை பங்குதந்தை ஜெகன் ஆண்டனி தலைமையில், உதவி பங்கு தந்தை இம்மானுவேல் பீட்டர் முன்னிலையில், மெழுவர்த்தி ஏந்திய பங்கு மக்கள் முன்னே செல்ல ஆடம்பர தேர்பவனி அக்காமலை எஸ்டேட் முதல் பிரிவு மஸ்டர் பகுதியிலிருந்து தொடங்கியது.



எஸ்டேட் பகுதியில் ஊர்வலமாக சென்ற இந்த தேர்பவனியில் கலந்து கொண்ட பங்குமக்களும் சபை மக்களும் மாதா, புனித அந்தோணியார் உருவங்களுக்கு பூமாலை மற்றும் பூக்கள், உப்பு, மிளகு ஆகியவற்றை வழங்கி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றவும் நிறைவேற்றிய கோரிக்கைகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் மனமுருக வேண்டினர்.



பின்பு தேரிலிருந்து புனித அந்தோணியார், மேரி மாதா உருவங்களை ஆலயத்திற்கு பங்கு மக்கள் எடுத்துச்சென்றனர். அதைத்தொடர்ந்து சிறப்பு கூட்டுப் பாடற்பலி நடைபெற்று வெகு சிறப்பாக தேர்த்திருவிழா இனிதே நிறைவடைந்தது. பின்பு சபைமக்கள் அனைவருக்கும் அன்பின் விருந்து நடைபெற்றது.

இவ்விழா ஏற்பாடுகளை சபை மக்கள் செய்திருந்த நிலையில் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்களும், ஆலய பங்கு மக்களும் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...