கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி - வால்பாறையில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து, கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியின் சார்பில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.



கோவை: கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து, வால்பாறையில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் பாஜகவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.



இந்நிலையில், வால்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியின் சார்பில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர்.



இந்த நிகழ்வில், நகரச்செயலாளர் கலைவாணன் தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.வி.பேபி நிர்வாகிகள் பிரபாகரன், யூ.கருப்பையா, குசலவன், அலி,சோடாசெந்தில், சிவலிங்கம், டாக்டர் பவுலோஸ், சண்முகவேல் ஆகியோர் முன்னிலையில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

வால்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் அலி, அசீஸ், ரஹ்மான்,செபீர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....