கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே பைக் திருட்டு - இருவர் கைது!

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வெள்ளமடை பகுதியில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக்கை திருடிச் சென்ற 2 இளைஞர்களை பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: பெரியநாயக்கன்பாளையம் அருகே பைக் திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்த வெள்ளமடையில் குடியிருந்து வருபவர் பெருமாள். இவர் நேற்று முந்தினம் இரவு வீட்டின் முன் தனது பைக்கை நிறுத்திவிட்டு தூங்கச் சென்றுள்ளார்.

காலை வந்து பார்த்த போது, அவரது பைக்கை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து பெருமாள் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் அளித்துள்ளர்.

இந்த நிலையில் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் வாகனச் சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்தபோது அது திருடப்பட்ட வாகனம் என தெரியவந்தது.

இதையடுத்து அதில் வந்த ராஜேஷ் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து கோவை மத்தியச் சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து பைக்கையும் மீட்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...