கோவையில் ரேசன் அரிசி கடத்தல் வழக்கு - தலைமறைவாக இருந்த இளைஞர் கைது!

கோவை - செல்வபுரம் சாலையில் கடந்த மார்ச் மாதம் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் கேரளாவிற்கு கடத்த முயன்ற 3 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த தெற்கு உக்கடம் பகுதியைச் சேர்ந்த அபிப் ரகுமான் என்பவரை போலீசார் இன்று கைது செய்தனர்.


கோவை: கோவையில் 3 டன் ரேசன் அரிசி கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை - செல்வபுரம் சாலையில் கடந்த மார்ச் மாதம் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, லாரி மூலம் கேரளாவிற்கு கடத்திச் சென்ற சுமார் 3 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்து லாரி ஓட்டுநரை கைது செய்தனர்.

இவ்வழக்கில் தலைமறைவான தெற்கு உக்கடம் பகுதியைச் சேர்ந்த அபிப் ரகுமான் என்பவரை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் கோவை - பேரூர் சாலையில் உள்ள தனியார் விடுதியில் பதுங்கியிருந்த அபிப் ரகுமானை போலீசார் இன்று மடக்கி பிடித்து கைது செய்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட அபிப் ரகுமான் 7 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...