கோவையில் சூலூர் போலீசார் நடத்திய வாகனசோதனையில், இருசக்கர வாகனம் மூலம் கஞ்சாவை கடத்திவந்து விற்பனை செய்ய முயன்ற சூரிய பிரகாஷ் என்ற இளைஞர் பிடிபட்டார். அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 1600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவையில் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பா பத்ரிநாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.
அதன் அடிப்படையில், சூலூர் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சூலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர், இருகூர் பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் சூரிய பிரகாஷ் (வயது19) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 1.600 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சாவை கொண்டு வர பயன்படுத்திய இரண்டு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, நீதிமன்ற காவலில் அடைந்தனர்.
அதன் அடிப்படையில், சூலூர் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சூலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர், இருகூர் பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் சூரிய பிரகாஷ் (வயது19) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 1.600 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சாவை கொண்டு வர பயன்படுத்திய இரண்டு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, நீதிமன்ற காவலில் அடைந்தனர்.