திருப்பூர் மதுபானக் கூடத்தில் இளைஞரைத் தாக்கிய ஊழியர்கள் - வைரல் வீடியோவால் பரபரப்பு!

திருப்பூரில் மதுபான கூடத்தில் இளைஞர் ஒருவரை கடை ஊழியர்கள் கம்பால் சரமாரியாக தாக்கி இழுத்துச் சென்றனர். இதை மதுஅருந்த வந்த ஒருவர் எடுத்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.



திருப்பூர்: திருப்பூர் புஷ்பா ரவுண்டான கல்லூரி சாலை சந்திப்பில் உள்ள மதுபான கடை ஒன்றில் மது அருந்திய இளைஞர் ஒருவரை மதுபான கூட ஊழியர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



அந்த வீடியோவில், முதலில் கைகளால் தாக்கிய மதுபானக்கூட ஊழியர்கள் பிறகு கையில் ஒரு லத்தியை கொண்டு தாக்குவதும், கழுத்தை நெரிப்பதும் பின்னர் தரதரவென இழுத்துச் செல்லும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.



இந்த வீடியோ அங்கு மது அருந்த சென்ற ஒருவரின் மொபைல் மூலம் எடுக்கப்பட்டுள்ளது . தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது குறித்து காவல் நிலையத்தில் எந்த ஒரு புகாரும் பதிவு செய்யப்படாத நிலையில், சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள இந்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...