திருப்பூரில் மதுபான கூடத்தில் இளைஞர் ஒருவரை கடை ஊழியர்கள் கம்பால் சரமாரியாக தாக்கி இழுத்துச் சென்றனர். இதை மதுஅருந்த வந்த ஒருவர் எடுத்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
திருப்பூர்: திருப்பூர் புஷ்பா ரவுண்டான கல்லூரி சாலை சந்திப்பில் உள்ள மதுபான கடை ஒன்றில் மது அருந்திய இளைஞர் ஒருவரை மதுபான கூட ஊழியர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், முதலில் கைகளால் தாக்கிய மதுபானக்கூட ஊழியர்கள் பிறகு கையில் ஒரு லத்தியை கொண்டு தாக்குவதும், கழுத்தை நெரிப்பதும் பின்னர் தரதரவென இழுத்துச் செல்லும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.
இந்த வீடியோ அங்கு மது அருந்த சென்ற ஒருவரின் மொபைல் மூலம் எடுக்கப்பட்டுள்ளது . தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்து காவல் நிலையத்தில் எந்த ஒரு புகாரும் பதிவு செய்யப்படாத நிலையில், சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள இந்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.