கோவை அருகே மின்கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதி விபத்து - இளைஞர் உயிரிழப்பு

கோவை ஈச்சனாரி அருகே இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மின்விளக்கு கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த முத்துச்செல்வம் என்ற தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மகன் முத்து செல்வம் (வயது26).

இவர் கோவை ஈச்சனாரி அருகே தனியாக அறை எடுத்து தங்கி மலுமிச்சம்பட்டியில் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், வழக்கம்போல் பணி முடிந்து இரவு 11.30 மணியளவில் தனது அறைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது, ஈச்சனாரி மேம்பாலத்தை கடந்து சென்றபோது, சாலையில் இருந்த வேகத்தடுப்பில் மோதாமல் இருக்க, வலது புறமாக அவர் தமது இரு சக்கர வாகனத்தை திருப்பியபோது, கட்டுப்பாட்டை இழந்த அந்த இரு சக்கர வாகனம் சாலை நடுவே இருந்த மின்விளக்கு கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயமடைந்த முத்துச்செல்வத்தை, அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...