வடவள்ளியில் புதிய உத்தேச பேருந்து திருப்புமுனையம் அமைக்க கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட கட்டிடம் மற்றும் கழிப்பிடம் அகற்றம்

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் மேற்கு மண்டலம், வடவள்ளியில் புதிய உத்தேச பேருந்து திருப்புமுனையம் அமைப்பதற்காக நுழைவாயிற் பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 8 கடைகள் கொண்ட பழைய வணிக வளாக கட்டிடம் மற்றும் பழைய கழிப்பிடங்கள் இன்று (1.03.2017) அகற்றப்பட்டு வழித்தடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், "கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், வடவள்ளியில் பேருந்துகள் நிறுத்துமிடம் உள்ளது. பேருந்துகள் நிறுத்துவதற்கு போதுமான இடவசதி இல்லாததால், உத்தேச பேருந்து திருப்புமுனையம் போதுமான வகையில் பேருந்துகள் இடையூரின்றி நுழையும் வசதி மற்றும் வெளியேறும் வசதி ஏற்படுத்தும் வகையில் புதிய உத்தேச பேருந்து திருப்புமுனையம் அமைப்பதற்கான பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, புதிய உத்தேச பேருந்து திருப்புமுனையம் அமையும் நுழைவாயிற் பகுதியில் அமைந்துள்ள ஆக்கிரமிப்புகள் சர்வே செய்து அப்புறப்படுத்தவும், பேருந்துகள் நுழைவுப் பகுதியிலுள்ள மிகப்பழமையான கழிப்பிடங்களையும் மற்றும் மாநகராட்சிக்கு சொந்தமான சிறு கடைகளையும் அகற்றி மாற்று ஏற்பாடு செய்தும், பேருந்து நிலையம் உள்பகுதியில் நுழைய இடவசதி ஏற்படுத்தும்படியும் திட்டமிட்டு, வடவள்ளியில் புதிய உத்தேச பேருந்து திருப்புமுனையம் அமைப்பதற்கான பணிகள் வரைவில் மேற்கொள்ளப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தோம். 



அதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக கடந்த 20.01.2017 அன்று மேற்கு மண்டல உதவி ஆணையர் கே.ராமைய்யா, உதவி நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் வடவள்ளியில் புதிய உத்தேச பேருந்து திருப்புமுனையம் அமைப்பதற்காக நுழைவாயிற் பகுதியில் உள்ள தனியார் ஆக்கிரமிப்புக் கடைகள் மற்றும் தனியார் அலுவலகங்கள் காவல்துறை உதவியுடன் மாநகராட்சிப் பணியாளர்களைக் கொண்டு அகற்றப்பட்டு, புதிய உத்தேச பேருந்து திருப்புமுனையம் அமைப்பதற்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

தற்பொழுது அதன் தொடர்ச்சியாக இன்று (மார்ச் 1) வடவள்ளியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 8 கடைகள் கொண்ட பழைய வணிக வளாக கட்டிடம் மற்றும் பழைய கழிப்பிடங்கள் காவல்துறை உதவியுடன் மாநகராட்சிப் பணியாளர்களைக் கொண்டு பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டு, பேருந்து திருப்புமுனையம் அமைப்பதற்கு நுழைவாயிற் பகுதியாக வழித்தடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இதனால் திருப்புமுனையத்திற்கு வருகின்ற பொது மக்கள் இடையூறு இல்லாமல் பேருந்துகள் மற்றும் வாகனங்களில் வந்து செல்வதற்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இடையர்பாளையம் சாலை மற்றும் மருதமலை சாலை சந்திப்பு பகுதி விஸ்தரிக்கப்பட்டு, சாலை அகலப்படுத்தியும் புதிய உத்தேச பேருந்து திருப்புமுனையம் அமைப்பதற்கான ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளபட்டுள்ளது" என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...