தமிழக அரசு நிர்ணயித்த ஊதியத்தை வழங்க வலியுறுத்தி கோவை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக சுமார் 300க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக அரசு கூறிய 721 ரூபாய் ஊதியம் வழங்க வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.இதனை அடுத்து,கடந்த 3 மாதங்களுக்குமுன் மாவட்ட ஆட்சியர் 721 ரூபாய் வழங்க அறிவுறுத்தியதை அடுத்து அந்தப் போராட்டங்கள் கைவிடப்பட்டன.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அறிவித்த ஊதியம் தற்போதுவரை வழங்கப்படவில்லை எனவும், உடனடியாக நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை தங்களுக்கு வழங்க வலியுறுத்தியும் இன்று கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியரிடமும் தங்களது கோரிக்கையை முன்வைக்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தமிழக அரசு கூறிய 721 ரூபாய் ஊதியம் வழங்க வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.இதனை அடுத்து,கடந்த 3 மாதங்களுக்குமுன் மாவட்ட ஆட்சியர் 721 ரூபாய் வழங்க அறிவுறுத்தியதை அடுத்து அந்தப் போராட்டங்கள் கைவிடப்பட்டன.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அறிவித்த ஊதியம் தற்போதுவரை வழங்கப்படவில்லை எனவும், உடனடியாக நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை தங்களுக்கு வழங்க வலியுறுத்தியும் இன்று கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியரிடமும் தங்களது கோரிக்கையை முன்வைக்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.