மாட்டுக்கான போராட்டம் மண்ணுக்காகவும் தொடர்கிறது: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கோவையில் இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்



புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையை சேர்ந்த இளைஞர்கள் நீதிமன்றம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜல்லிக்கட்டு வேண்டி ஒட்டுமொத்த தமிழர்கள் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் வெற்றியும் கண்டனர். இளைஞர்களின் அறப்போராட்டத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்தன.

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. நெடுவாசல் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நெடுவாசல் பகுதி மக்களுக்கும், விவசாயிகளுக்கும் ஆதரவாக தற்போது இளைஞர்களும், மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து, இளைஞர்களின் இந்த போராட்டம் அண்டை மாவட்டங்களுக்கும் பரவி வருகிறது. 



இன்று காலை, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு திரண்ட இளைஞர்கள் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும், மாட்டுக்காக வந்த நாங்கள், தமிழகத்தின் மண்ணை காக்கவும் வருவோம் என்றும் கோஷம் எழுப்பினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 26 பேரை போலீசார் கைது செய்தனர்.



Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...