சம்பளம் கொடுக்க மறுக்கும் தனியார் நிறுவனத்திடம் இருந்து சம்பளம் பெற்றுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

சம்மளம் கொடுக்க மறுக்கும் தனியார் நிறுவனத்திடம் இருந்து சம்பளம் பெற்றுத் தரக் கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்புலிகள் கட்சியின் சார்பில் இன்று மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழ்புலிகள் கட்சியின் சார்பில் மாவட்ட துணைத் தலைவர் சி.ஆறுமுகம் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

மேட்டுப்பாளையம் பகுதி உக்கான் நகரில் வசிக்கும் ராஜன் என்பவரின் மகள்களான பிரபா, பிரித்திகா, பிரின்சிகா ஆகிய மூவரும் மேட்டுப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் சாரதா டெரி டவல்ஸ் ஆலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலை பார்த்து வந்துள்ளனர்.

அந்த ஆலையின் விடுதியில் தங்கி வேலை பார்க்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதன் காரணமாக ஆலையின் தங்கும் விடுதியிலேயே தங்கி வந்தனர்.

அந்த தங்கும் விடுதியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததாலும், உணவு சரியாக கொடுக்காததாலும் இவர்களால் அங்கு தங்கி வேலை செய்ய முடியவில்லை. அதனால் வேலையை விட்டு நின்றுவிட்டார்கள்.

இதனால் அந்த ஆலை நிர்வாகம் இவர்கள் வேலை செய்ததற்கான சம்பளத்தை இன்று வரை வழங்கவில்லை. மேலும், இவர்களைப் போலவே 800க்கும் மேற்பட்ட 15 முதல் 16 வயது வரை உள்ள பெண்கள் சட்டத்திற்கு புறம்பாக அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

எனவே, மேற்கண்ட நிறுவனத்தின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு பெண்களுக்கு உரிய சம்பளம் வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...