கல்வியும், மருத்துவமும் இலவசாமாக வழங்கப்பட வேண்டும் என அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற முதல் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் கோவை மாநகர, கிழக்கு மண்டல முதல் மாநாடு சிங்காநல்லூர் அருகே உள்ள சக்கரை செட்டியார் நகர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டினை பிரவீன் கொடியேற்றி துவங்கி வைத்தார்.

இம்மாநாட்டிற்கு எஸ்.ஆறுமுகம், கே.சி.மூர்த்தி, ஆர்.ஜீவபாரதி ஆகியோர் தலைமை வசித்தனர். ஜி.பி.சக்திவேல் அனைவரையும் வரவேற்று வரவேற்புரையாற்றினார். கே.புருசோத்தமன் மற்றும் வே.வசந்தகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். எஸ்.பாலசந்திரன், பி.முருகன், வெ.ஜீவானந்தம், ச.பூர்ணிமா நந்தினி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.



இதைத்தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் தலைவராக ஆர்.பிரகாஷ், செயலாளராக எஸ்.ஆறுமுகம், பொருளாளராக எம்.மணிகண்டன், துணைத்தலைவர்களாக ச.பூர்ணிமா நந்தினி, ஜே.ஸ்டாலின், வி.நாகராஜ், துணைச் செயலாளராக எம்.வீரசீனு, கே.காளிதாஸ், ஏ.விஜயகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த மாநாட்டில் கல்வியும், மருத்துவமும் அனைவருக்கும் இலவசாமாக வழங்கப் படவேண்டும். நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும். ஹோப் காலேஜ், சிங்காநல்லூர் ஒண்டிப்புதூர் ஆகிய பகுதிகளில் நெடுஞ்சாலையை கடக்க சுரங்க நடைபாதைகள் அமைக்கப்பட வேண்டும். 



மேலும், கிழக்கு மண்டலப் பகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட வேண்டும். அதேபோல பொழுதுபோக்கு பூங்கா ஒன்றும் அமைக்கப்பட வேண்டும். நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள எஸ்ஐஎச்எஸ் காலனி ரயில்வே கடவில் உள்ள மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.



Newsletter

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...