பவானியின் குறுக்கே கேரள அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களின் வாழ்வாதரமாக விளங்கும் பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என கோவை மாவட்ட மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவை சிங்காநல்லூர் அருகே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 25-வது கோவை மாவட்ட பொதுக்குழு இன்று நடைபெற்றது. இப்பொதுக்குழுக் கூட்டத்திற்க்கு அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமை வகித்தார்.

இதில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளராக கணேசமூர்த்தி, கழகத் துணைப் பொதுச் செயலாளராக ஏ.கே.மணி, ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்களாக டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், டாக்டர் க.சந்திரசேகரன், மு.பூமிநாதன், க.ஜெய்சங்கர் ஆகியோர் ஒருமனதாகத் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் பல்வேறு நீர்நிலைகள், கண்மாய்கள், ஆற்றுப் படுகைகள் மற்றும் தரிசு நிலங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பற்றிப் படர்ந்து வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டும்.

குறிப்பாக சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியில் தமிழக இளைஞர்களும், மாணவர்களும் தங்களை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டு பாடுபட்டு, வருங்காலத் தமிழகத்தை வளமாக்கிட வேண்டும்.

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களின் வாழ்வாதரமாக விளங்கும் பவானி ஆற்றின் குறுக்கே, தேக்குவட்டை, மஞ்சக்கண்டி ஆகிய இடங்களில் தடுப்பு அணைகளைக் கட்டும் முயற்சியில் கேரள அரசு தீவிரமாக இறங்கி உள்ளது. மேலும் பாடவயல், சீரக்கடவு, சாவடியூர், சாலையூர் ஆகிய இடங்களிலும் அணைக் கட்டத் திட்டமிட்டுள்ளனர்.

 

பவானியின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதை மத்திய அரசும், மாநில அரசும் உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பருவ மழை பொய்த்ததாலும், அண்டை மாநிலங்கள் வஞ்சித்ததாலும், தமிழ்நாட்டின் ஆறுகள் வறண்டுவிட்டன. போதுமான தண்ணீர் இன்றிப் பயிர்கள் காய்ந்து கருகியதால் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு உயிர் இழந்துள்ளனர். 

தமிழகம் முழுவதும் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள வறட்சி நிவாரணப் பலன்கள் இரண்டு ஹெக்டேருக்கு அதாவது ஐந்து ஏக்கருக்குக் கீழே உள்ள விவசாயிகளுக்கு மட்டுமே கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த உச்சவரம்பைத் தளர்த்தி, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சம் இன்றி வறட்சி நிவாரண நிதி உள்ளிட்ட பயன்கள் வழங்க வகை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

தொண்டாமுத்தூர்: திமுக வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் வெற்றிக்காக கட்சியினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் – செந்தில் பாலாஜி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் நிர்வ...

வால்பாறை: திமுக வேட்பாளருக்கு ஆதரவு கோரி டாக்டர் மகேந்திரன் பரப்புரை..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் குட்டி என்கிற ஆ. சுதாகருக்கு ஆதரவு கோரி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தேர்தல்...