வனப் பகுதியில் தொடரும் வறட்சியின் காரணமாக முதுமலை சரணாலயத்தில் பெண் யானை பலி

கடந்த இரு நாட்களுக்கு முன்பு முதுமலை புலிகள் சரணாலயத்திற்குட்பட்ட பகுதியில் உடல்நிலைக் குறைவின் காரணமாக இருந்த காட்டு யானை மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

கோவை மாவட்டத்தில் சமீபகாலமாக மழையின்றி பெரும்பாலான பகுதிகளில் வறட்சி நிலவி வருகிறது. சரியான மழைப்பொழிவின்றி வனப் பகுதிகளும் தற்போது வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது.

இதில், முதுமலை புலிகள் சரணாலயத்திற்கு உட்பட்ட 321 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு தண்ணீர் இன்றி வனப் பகுதியே வறண்டு காணப்படுகிறது. இதனால் அங்குள்ள வன விலங்குகள் நீரின்றி பெரிதும் தவித்து வருகின்றன. 



இந்நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு முதுமலை புலிகள் சரணாலயத்திற்கு உட்பட்ட பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை ஒன்றி உடல்நிலைக் குறைபாடின் காரணமாக கீழே விழுந்து கிடந்துள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த முதுமலை புலிகள் சரணாலயம் இயக்குநர் சீனிவாச ரெட்டி, கால்நடை மருத்துவர் விஜயராகவன், வன அலுவலர் ஞானதாஸ் உள்ளிட்ட வன அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று உடல்நிலை குன்றிய அந்த பெண் யானைக்கு முதலுதவி மற்றும் உணவுகளை அளித்தனர்.

தொடர்ந்து அந்த யானையை நிற்கவைக்கும் முயற்சியில் முதுமலை புலிகள் சரணாலயத்தின் கும்கி யானைகளான பொம்மன், ஜான், சந்தோஷ் மற்றும் ஜம்பு ஆகிய யானைகள் வரவழைக்கப்பட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அந்த பெண் காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது.

தொடர்ந்து முதுமலை புலிகள் சரணாலயத்தில் நிலவிவரும் வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறையின் காரணமாக வன விலங்குகளான காட்டு எருமை, யானை, மான், கரடி, புலிகள், சிறுத்தைகள் உள்ளிட்டவை அடர்ந்த வனப்பகுதிகளை நோக்கி இடப்பெயர்ச்சியில் ஈடுபட்டுள்ளன.

இதுகுறித்து கூறிய முதுமனை சரணாலய வன அலுவலர், இனி வரும் காலங்களில் சரியான மழை பெய்யவில்லை எனில் வனப்பகுதிகளில் தற்போது உள்ள சூழலை விட கடுமையான பிரச்சனைகள் ஏற்படும், வன விலங்குகளின் உயிரிழப்புகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...