ஈஷாவிற்கு மோடி வருகையை எதிர்த்து கருப்பு பலூன் பறக்கவுடும் போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் அமைப்பினர்



கோவை ஈஷா யோகா மையத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியைக் கண்டித்து, வானில் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.

கோவையை அடுத்த வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர ஆதியோகி சிலை திறப்பு விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார்.

விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட ஈஷா யோகா மைய சிலை திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சமூக நீதிக்கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது யானை முகங்களுடனும், கருப்பு பலூன்களுடனும் முழக்கங்களை எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்ட சமூக நீதிக்கட்சியினர், வானில் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



இதையடுத்து போராட்டக்காரர்கள் கைகளில் இருந்த பலூன்களை காவல் துறையினர் உடைத்தனர். 



இப்போராட்டத்தில் கலந்து கொண்ட திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி கூறும்போது, ஈஷா யோகா மையத்தினர் காடுகளை அழித்தும், யானை வழித்தடங்களை ஆக்கிரமித்தும், அனுமதியின்றி சட்ட விரோதமாக கட்டப்பட்ட சிலையை பிரதமர் மோடி திறந்து வைப்பது கண்டிக்கத்தகக்து எனவும், இது ஈஷாவின் குற்றச்செயல்களை பாதுகாக்கும் நடவடிக்கை எனவும் குற்றம்சாட்டினார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...