தாராபுரத்தில் சின்ன காளியம்மன் கோவிலில் சாமி சிலை திருட்டு - போலீசார் விசாரணை!

தாராபுரம் சின்ன காளியம்மன் கோவிலில் சாமி சிலையை மர்மநபர்கள் இரவில் திருடிச் சென்றனர். சிசிடிவி காட்சியில் இரண்டு நபர்கள், இரவு நேரத்தில் சிலையை திருடிச் சென்றது தெரியவந்தது. இதன் அடிப்படையில் தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



தாராபுரம்: தாராபுரத்தில் சின்ன காளியம்மன் கோவிலில் சாமி சிலை திருடு போன சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தென்தாரை பீமராயர் அக்ரஹரர் பகுதியில் ஸ்ரீ சின்ன காளியம்மன் திருக்கோயில் உள்ளது.



இந்த கோவிலின் வெளி பிரகாரத்தில் மூன்று திசைகளிலும்ஸ்ரீ இந்திராணி தேவி மகேஸ்வரி தேவி வைஷ்ணவி தேவி ஆகியோரது கற்சிலைகள் சுவரில் வைக்கப்பட்டிருந்தன.

நேற்று இரவு கோவில் பூசாரி பிரவீன் குமார் வழக்கம்போல பூஜைகளை முடித்துவிட்டு இரவு 9 மணி அளவில் கோவில் நடையை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.



இன்று காலை கோவிலுக்கு வந்து பார்த்தபோது வெளிப்பிரகார சுவரில் இருந்த ஸ்ரீ இந்திராணி தேவியின் சிலையை மட்டும் மர்ம நபர்கள் பீடத்துடன் திருடி சென்று விட்டனர்.

சம்பவம் குறித்து தாராபுரம் போலீசில் பூசாரி பிரவீன் குமார் புகார் செய்ததை அடுத்து தாராபுரம் குற்றப் பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அதில், பொதுமக்களின் நடமாட்டம் இருந்த இரவு 9:46 மணியளவில் ஸ்கூட்டர் ஒன்றில் வந்த மர்ம நபர் கோவிலை சுற்று சுற்றி வந்ததாகவும் கோவில் திறந்திருந்த பொழுது சிவப்பு உடை அணிந்த ஒரு மர்ம நபர் கோவிலின் உள்பிரகாரத்தில் ஒளிந்து கொண்டு கோவிலின் நடை சாத்திய பின் ஸ்ரீ இந்திராணி சிலையை பீடத்துடன் பெயர்த்து எடுத்து வெளியே நின்று இருந்த நபரிடம் கொடுத்த சம்பவமும் பதிவாகியுள்ளது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கோவில் சிலையை திருடி சென்ற நபர்களை தேடி வருகின்றனர்

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...